Friday 10 May 2013

நலம் தரும் நல்லெண்ணெய்

அனைவருக்கும் நல்வரவு
   ன்மிகத்துடன் நெருங்கிய தொடர்புடைய நல்லெண்ணெயின் மகத்துவம் பலருக்கு தெரிவதில்லை. நல்லெண்ணெயில் அப்படி என்ன மகத்துவம் இருக்கிறது என்று இங்கே பார்போம்.
   எண்ணெய் வகைகளில் சிவப்புத் தன்மை கொண்டது நல்லெண்ணெய். எள்ளில் இருந்து இந்த எண்ணெய் பெறப்படுகிறது.
   மற்ற எண்ணெய்கள் போல் அல்லாமல்,உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பதுதான் இதன் தனிச்சிறப்பு. கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணெய், ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, அதை சுத்திகரிக்கக் கூடியதும் கூட!
   முன்பு, எண்ணெய் வகைகளில் நல்லெண்ணெய் மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. இதற்கு உதாரணமாக, கிராமப்புறங்களில் பால் தரும் பசு மாடுகளுக்கு எள் புண்ணாக்கு சிறிதளவும், அதனுடன் தேங்காய், கடலை புண்ணாக்கு ஆகியவையும் சேர்த்து கொடுப்பார்கள்.
   பசு மாட்டிற்கு எள் புண்ணாக்கு உட்கொள்ள கொடுத்து வந்தால், அதன் இரத்தத்தில் உள்ள கொழுப்பானது திரிக்கப்பட்டு பால் வழியே வந்து விடும். பால் கொழுப்புச் சத்து நிறைந்து தரமானதாக இருக்கும்.
   எதையும் அளவோடு உட்கொள்வது தான் நல்லது என்பார்கள். எள் புண்ணாக்கும் அப்படித்தான். இதை குறிப்பிட்ட அளவு பசு மாட்டிற்கு கொடுப்பது தான் மாட்டுக்கும் நல்லது, நமக்கும் நல்லது. அளவுக்கு அதிகமாக எள் புண்ணாக்கு கொடுத்தால் பசு மாடு இளைத்துப்போய் நோஞ்சான் மாதிரி ஆகிவிடும். அதனால்,அளவோடு கொடுத்து அதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
   மேலும், பூப்பெய்தும் இளம்பெண்களுக்கு சுத்தமான நல்லெண்ணெய் சிறிதளவு குடிப்பதுற்கு கொடுப்பார்கள். இவ்வாறு செய்வதால், கரு முட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படுகின்றது. கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணெய் செய்கிறது.
   இதுதவிர, நல்லெண்ணையை உடலில் தேய்த்து குளித்தால் அது மூல சூட்டை தணிக்கும். உடலில் படியும் எண்ணெய் பசையை அகற்றி, தோல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க இது உதவுகிறது. இதனால் வியர்வை வெளியேற்றம் சீராக நடைபெறும்.
   இவ்வாறு பல பயன்களை தரும் நல்லெண்ணெய் தீபத்தை கோவில்களில் ஏற்றுவதும் சிறப்புமிக்கது. நல்லெண்ணெய் கொண்டு ஏற்றப்பட்ட தீபம் எரியும்போது அதன் எண்ணெய் பசை ஆவி நிலையில் கருவறையின் சுவர்களில் உள்ள கல்லின் மீது படியும். அதனுடன், கற்பூரம் எரிந்த சுடரும் படிந்து கொள்ளும். இவை கல்லில் குணத்துடன் சேர்த்து, இறைவனை வழிபட கருவறைக்குல் செல்லும் அனைவருக்கும் ஆரோக்கியத்தை தருகின்றது.
   இதற்கு உதாரணமாக ஒரு வழக்கத்தை கூறலாம். நல்லெண்ணெயில் கற்பூரச்சுடரை கலந்து நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது பழைய பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஆரோக்கியம் தருவதுடன் நல்ல சிந்தனையையும் தூண்டும்.
   எள்ளும், எண்ணெயும் எரிந்து வரும் புகையின் மணம், அதன் ஆவி-இந்த உலகில் மட்டுமல்ல; பிரபஞ்சத்தின் ஊடே மனிதன் கொண்டுள்ள தொடர்பை நீட்டிக்க வல்லது என்பதும் ஆச்சரியமான உண்மை தான்.
   நல்லெண்ணெயின் மகத்துவத்தை இப்போது தெரிந்து இருப்பீர்கள். இனியாவது, சமையலில் நல்லெண்ணெயை சேர்த்துக்கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.



Password = j475fd


VAZHGA VALAMUDAN

உங்கள் அனைவருக்கும் நன்றி !


No comments:

Post a Comment